‘பெர்லின் இரவுகள்’ ‘பெர்லின் இரவுக் குறிப்புகள்’ என்ற பெயரில் மாலனது ‘திசைகள்’ இணைவலைப் பத்திரிகையில் (2003-2004) தொடராக வெளிவந்தது. பொ.கருணாகரமூர்த்தி 25 வருட காலமாக பெர்லினில் வாழ்ந்து வருபவர். அங்கே வாடகை வண்டி ஓட்டியாக அவர் சந்தித்த மனிதர்களையும், அவர்களின் குணாதிசயங்களையும், ஆச்சரியப்பட வைத்த பல விநோத சம்பவங்களையும், கூடவே மீண்டும் ஜெர்மனியின் தலைநகராகி விட்ட பெர்லின் மாநகரத்தின் பொலிவையும் அழகையும், கேளிக்கை மிகுந்த அதன் இரவு வாழ்க்கையையும் தணிக்கைகள் எதுவுமின்றித் தன் இயல்பான, அங்கதம் தோய்ந்த நடையில் சுவாரஸ்யமாகப் பதிவுசெய்திருப்பதன் மூலம் வெறும் தகவல் குறிப்புகளாக அல்லாமல் ஒரு கலாபூர்வமான பதிவாக நம் முன் நிறுத்துகிறார்.