ராஞ்சி பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுநிலை பட்டமும் இந்திய தொழில்நுட்ப கழகத்தில் கணிபொறியியலில் முதுநிலை ஆராய்ச்சி பட்டமும் பெற்றவர். இருபத்தியைந்து வருடங்கள் சென்னை இந்திய தொழில்நுட்ப கழகத்தின் கணினி மையத்தில் பணிபுரிந்து ஸிஸ்டம்ஸ் இஞ்சினீயரான இவர் 1999-ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டார்.தனது நாற்பத்தியெட்டாவது ஆண்டில் முதன் முதலாக எழுதத் தொடங்கிய இவருடைய கவிதைகளும் சிறுகதைகளும் பெரும்பாலும் சுபமங்களா, கணையாழி, புதிய பார்வை போன்ற சிறுபத்திரிக்கைகளில் பிரசுரமாகியுள்ளன. இவருடைய “அதுவும் கடந்து” எனும் சிறுகதை இலக்கிய சிந்தனை மாதப் பரிசை பெற்றது. இவருடைய “ கோபங்கள்” எனும் சிறுகதை அக்னி-சுபமங்களா நடத்திய போட்டியில் ஆயிரம் ரூபாய் பரிசை பெற்றது. இவருடைய கவிதை தொகுப்பு “சுயம்” 2000 - இல் வெளி வந்தது.